பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2018

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவு பெற்றவுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படடன, சென்ற கல்வியாண்டில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படடன. சொல்வளம், ஊறுப்பெழுத்து, தமிழ் மேலும் ..

ஆண்டிறுதி புகைப்படத் தொகுப்பு

பாடசாலை இறுதி நாளான நேற்று பாடசாலைக்கு வருகை தந்த அனைத்து மாணவர்களையும் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பு இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்டில் புதிய வகுப்புகளிற்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018

வணக்கம், அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018 வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் அனைவரும் 30 நிமிடத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வருகை தருதல் வேண்டும் மற்றும் எங்களது பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலை சீருடையில் வருதல் கட்டாயமாகும்.

தாயக நலன் சார்ந்த உதவி

வணக்கம், எங்களது பாடசாலை மூலமாக முடிந்தளவு சிறிய சிறிய உதவிகளை தாயக மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றோம். அதில் அடுத்தபடியாக முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இந்த சிறுமி யாழ். பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்க்கான முழு சிலவையும் பொறுப்பேற்று அதன் முதற்கட்டமாக கற்றல் தேவைக்கான உபகரணங்கள் வேண்டுவதற்காக சிறு தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளுது.

பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 05/05/18 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

மீண்டும் ஆரம்பம்

கடந்த வாரம் காலநிலை மாற்றத்தால் பாடசாலை நடைபெறவில்லை, வழமைபோல இந்த வாரம் (10/03/2018) பாடசாலை நடைபெறும் என்பதினை அனைத்து பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம்

பனிப்பொழிவு

பிரித்தானியாவின் திடீர் காலநிலை மாற்றத்தால் இந்த வாரம் முழுவதும்  பனிப்பொழிவு இருக்குமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. டார்ட்போர்ட் பகுதியிலும் கூடுதலான பனிப்பொழிவு இருப்பதால் வரும் சனிக்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகின்றது.

அரையாண்டு பரீட்சை 2018

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் அரையாண்டு தமிழ்ப் பரீட்சை இன்று எங்களது பாடசாலையில் இடம்பெற்ற வேளை.

தாயக நலன் சார்ந்த உதவி

தாயகத்தில் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு எங்களது பாடசாலை சார்பாக சிறிய உதவித் தொகை இன்று வழங்கப்பட்டது.

மாவீரர் நாள் நினைவுகூரல் 2017

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது இன் உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 02.12.2017 அன்று காலை 10.30 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.